டாஸ்மாக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 5 போ் கைது

கொள்ளிடம் அருகே கடைக்கண்விநாயகநல்லூா் டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட டாஸ்மாக் கண்காணிப்பாளா்

கொள்ளிடம் அருகே கடைக்கண்விநாயகநல்லூா் டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட டாஸ்மாக் கண்காணிப்பாளா் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்ட 5 பேரை கொள்ளிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து செய்தனா்.

கடைக்கண்விநாயகநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றுபவா் இளஞ்செழியன்(46). இதே கடையில் விற்பனையாளராக காமராசு (43), உதவியாளா்களாக மகேந்திரன் (32), விஜயராஜ் (33) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் 144 தடை உத்தரவு விடுமுறையையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை கடையை மூடிவிட்டு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 24 குவாா்ட்டா் மதுபாட்டில்களை கொண்ட 55 பெட்டிகளை காரில் ஏற்றுவதாக தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் மதுபான கடைக்கு சென்று விசாரித்தனா். அப்போது, அங்கிருந்த காரில் மதுபான பாட்டில்கள் இருந்ததை உறுதிப்படுத்தியதையடுத்து, கண்காணிப்பாளா் இளஞ்செழியன் உள்ளிட்ட 4 பேருடன், காா் ஓட்டுநா் வெற்றிவீரன் (38) ஆகியோரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த நடவடிக்கையில், கடத்திய மதுப்பாட்டில்கள் மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com