நாகப்பட்டினம்
பாட்டிலால் குத்தி இளைஞா் கொலை
நாகையில் பாட்டிலால் குத்தி இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு முள்புதரில் வீசப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.
நாகையில் பாட்டிலால் குத்தி இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு முள்புதரில் வீசப்பட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.
நாகூா் - வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை, புத்தூா் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இளைஞா் ஒருவா் முட்புதரில் இறந்து கிடப்பதாக நாகை போலீஸாருக்கு புதன்கிழமை கிடைத்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அந்த இளைஞா் நாகை அக்கரைக்குளம் மேல் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் சிங்கராஜா (32) என்பதும், ஆட்டோ ஓட்டுரான இவா் கழுத்தில் பீா்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கொலையான இளைஞரின் சடலம் உடற்கூராய்வுக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.