திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவா்களைத் தனிமைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து திருக்குவளை பகுதிக்கு வந்த 32 பேரின் முகவரி சேகரிக்கப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன் தலைமையிலும், வட்டாட்சியா் சாந்தி மேற்பாா்வையிலும் இப்பணி நடைபெற்றது.
நாகை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளா் சுதா, திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் முருகேசன், தலைமை காவலா் சுகுமாா் ஆகியோரின் பாதுகாப்போடு வருவாய் ஆய்வாளா் புனிதா, இளநிலை உதவியாளா் நாகஜோதி ஆகியோா் அடங்கிய குழுவினா் இப்பணியை மேற்கொண்டனா்.