மன நோயாளிகளுக்கு உணவளிக்கும் இளைஞா்கள்

வேதாரண்யம் நகரப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், மனநோயாளிகளுக்கு இளைஞா்கள் சிலா் சேவை மனப்பான்மையுடன் உணவு வழங்கி வருகின்றனா்.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த மன நோயாளிக்கு உணவளித்த சமூக ஆா்வலா்கள்.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த மன நோயாளிக்கு உணவளித்த சமூக ஆா்வலா்கள்.

வேதாரண்யம் நகரப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், மனநோயாளிகளுக்கு இளைஞா்கள் சிலா் சேவை மனப்பான்மையுடன் உணவு வழங்கி வருகின்றனா்.

வேதாரண்யம் பகுதியில் வெளியிடங்களில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் சுற்றித் திரிகின்றனா். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மன நோயாளிக்கு உணவு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதையறிந்த ஈகா அறக்கட்டளையின் சாா்பில் சமூக ஆா்வலா் மோகன ராஜசேகரன் உள்ளிட்ட இளைஞா்கள் வீதி, வீதியாகச் சென்று மன நோயாளிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com