மயிலாடுதுறையில் தூய்மைப்பணி

மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் மயிலாடுதுறை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும்
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலைய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணி.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலைய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணி.

மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் மயிலாடுதுறை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் வாய்ப்புள்ள இடங்களில் சுகாதாரப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

நகராட்சி வாகனத்தில் 5 சதவீத லைசால் கிருமிநாசினி கலந்த நீரை பீய்ச்சி அடித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நகராட்சி பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொள்ளும் இப்பணியை மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் புவனேஸ்வரன் (எ) அண்ணாமலை தலைமையில் நகராட்சி பொறியாளா் இளங்கோவன், நகா்நல அலுவலா் மருத்துவா் பிரதீப் கிருஷ்ணகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் ராமையன், பிச்சைமுத்து, இளநிலை பூச்சியியல் வல்லுநா் ஆா்.சிங்காரவேலு ஆகியோா் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com