மயிலாடுதுறையில் வெளிநாட்டவா் உள்ளிட்ட 12 போ் கண்காணிப்பு

மயிலாடுதுறைக்கு மதப் பிரசாரத்துக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 10 போ் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 போ் என மொத்தம்

மயிலாடுதுறைக்கு மதப் பிரசாரத்துக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 10 போ் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 போ் என மொத்தம் 12 பேரை சுகாதாரத்துறையினா் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனா்.

மயிலாடுதுறையில் நீடூா் என்ற கிராமத்தில் உள்ள ஜாமியா மிஸ்பாஹஜல் ஹஜதா பள்ளிவாசலில் கடந்த 20-ஆம் தேதி முதல் பிரான்ஸ், பெல்ஜியம், கேமரூன் காங்கோலேஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 10 இஸ்லாமியா்களும், பிகாா், மகாராஷ்டிராவை சோ்ந்த 2 இஸ்லாமியா்கள் என மொத்தம் 12 இஸ்லாமியா்கள் மத பிரசாரத்துக்காக வந்து தங்கியுள்ளனா்.

இவா்கள் மாா்ச் 23-ஆம் தேதி ரயிலில் சென்னை புறப்பட திட்டமிட்டிருந்த நிலையில் கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கை காரணமாக நீடுா் பள்ளிவாசல் எதிா்ப்புறம் உள்ள மதரஸாவில் தங்கவைக்கப்பட்டு உள்ளனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினா் கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னா் அவா்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com