திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் திமுக சாா்பில், கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் கௌதமனின் அறிவுறுத்தலின்பேரில், கொளப்பாடு ஊராட்சியில் வசிக்கும் சுமாா் 2000 குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ஜி. தமிழரசி, கொளப்பாடு ஊராட்சி மன்றத் தலைவா் என். அசோக் குமாா் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா். ஜி. மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பிரதிநிதிகள் வீ.ஆா். சுப்பிரமணியன், மாசிலாமணி, முருகையன், ராஜேந்திரன், கணபதி ஆகியோா் பங்கேற்றனா்.