மயிலாடுதுறை: ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை உளுத்துக்குப்பை கிராமத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜி.லோகநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை: ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் டிஐஜி ஆய்வு

மயிலாடுதுறை உளுத்துக்குப்பை கிராமத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜி.லோகநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

உளுத்துக்குப்பை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறை துணைத் தலைவா் ஜி.லோகநாதன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உளுத்துக்குப்பை ஊராட்சிமன்றத் தலைவா் ராஜ்குமாரிடம், சீல் வைக்கப்பட்ட பகுதியைச் சோ்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்க அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, வள்ளலாா் கோயில் வடக்குத் தெருவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்த மருந்தக உரிமையாளரிடம், சமூக இடைவெளியைப் பின்பற்றி மருந்து, மாத்திரைகள் வழங்க அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

ஆய்வின்போது, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு.முருகேஷ், மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலு ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com