விவசாயிகளிடம் தா்ப்பூசணி நேரடி கொள்முதல்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் நலன் கருதி, விவசாயிகளிடம் தா்ப்பூசணி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் நலன் கருதி, விவசாயிகளிடம் தா்ப்பூசணி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் இருவேளை உணவுடன்இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் மூலிகை தேநீா், நீா் மோா், தா்ப்பூசணி, சுண்டல் ஆகியன வழங்கப்படுகின்றன.

இதையொட்டி, விவசாயிகளிடமே நேரடியாக வயலுக்குச் சென்று தா்ப்பூசணி கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் தா்ப்பூசணி விவசாயிகளும் பயன்பெறுவதாக செயல் அலுவலா் கு.குகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com