நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் காற்றுச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 9 மணியளவில் தலைஞாயிறு சுற்றுப் பகுதியில் நல்ல மழை பெய்தது. வேதாரண்யத்தில் காலை 10.30 மணி தொடங்கி மழை பெய்து வருகிது.
இந்த மழை வேளாண் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. அதே நேரத்தில் மழை தொடர்ந்தால் உப்பு உற்பத்திப் பாதிக்கும் நிலை ஏற்படும்.