வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு இலக்குவனாா் பொருளுதவி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 125 மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கினா்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த பணியை ஆசிரியா்கள் தங்களது சொந்த செலவில் செய்தனா்.