தரங்கம்பாடி வட்டத்துக்கு உள்பட்ட கடலோர மீனவா் கிராமங்களில் கடந்த 5 நாள்களாக கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தரங்கம்பாடி வட்டத்தில் கடந்த 5 நாள்களாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் உம்பன் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பால் தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் சேதமடைந்து படகுகள் மற்றும் கட்டுமரங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. இதையறிந்த பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் துறைமுகத்தை பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.