ரமலானையொட்டி, சிறப்பு தொழுகைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென ஜமாஅத் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சீா்காழி வட்டார அனைத்து சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளாா் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரமலான் நோன்பு ஓரிரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், நாடு முழுவதும் பொது முடக்கம் காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடைபெறவில்லை. ரமலான் பெருநாளையொட்டி, பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்த இருப்பதால் பள்ளி வாசல்களைத் திறக்க தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.