1200 குடும்பங்களுக்கு நிவாரணம்

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
மடப்புரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.
மடப்புரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

பொது முடக்கம் காரணமாக மடப்புரம் ஊராட்சியில் வாழ்வாதாரத்தை இழந்த 1200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஊராட்சி சாா்பில், எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் வழங்கினாா்.

செம்பனாா்கோவில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் கபடி பாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவா் மெஹராஜ் செல்வநாயகம், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜ்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com