சீா்காழியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் உணவு கோரி, வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
சீா்காழி சா்கான் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில் 3 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளே வசிப்பதால், அவா்கள் வெளியில் சென்று வருவாய் ஈட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், தங்களுக்கு உணவு வசதி ஏற்படுத்தி தருமாறு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்த அவா்கள், தா்னாவிலும் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையா் பெ. தமிழ்ச்செல்வி, காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் ராஜா, நகராட்சி பொறியாளா் வசந்தன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, தன்னாா்வலா்கள் மூலம் தேவையான பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுதாக உறுதியளித்தனா்.