தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய்: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயினை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று : நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயினை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று : நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயினை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று : நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குத்தாலம்: தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயினை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று : நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்கி வைக்க, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி திங்கள்கிழமை குத்தாலம் வருகை தந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் வருவாய் இழந்துள்ளனர். இந்த 7 மாதங்களில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு கூட மத்திய அரசு நேரடி உதவிகளையோ, பண்டிகை உதவிகளையோ வழங்கவில்லை. தீபாவளியை முன்னிட்டாவது மத்திய அரசு நாடெங்கிலும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மனுநீதி மற்றும் திருமாவளவன் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர் இது குறித்த கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றார்.

ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு  அவர் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக கூறியவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ரஜினி ஆன்மீகம், அமைதி, தனிமை என விரும்புபவர். அரசியல் என்பது நெருக்கடி, மன அழுத்தம், பரபரப்பு ஆகியவற்றை கொண்டது. இது ரஜினியின் இயல்புக்கு ஒத்து வருமா? என தெரியவில்லை என்றார். மூப்பனார் காலத்தில் அவர் அழைத்தப் போதே வந்திருந்தால் அவர் இந்நேரம் ஒரு இலக்கை எட்டியிருந்திருப்பார் என்றும் கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பிறகு குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் மஜகவின் உறுப்பினர் சேர்ப்பு முகாமை மு.தமிமுன்அன்சாரி தொடங்கி வைத்தார்.

மாவட்டம் எங்கும் 100 இடங்களில் டிசம்பர் 31 வரை இம்முகாம்கள் பரவலாக முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு முதல் கட்டமாக அடையாள அட்டைகளையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அவருடன் மாநிலச் செயலாளர் ராசுதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் சங்கை. தாஜ்தீன், மாவட்ட துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்டவிவசாய அணி செயலாளர் ஹாஜாசலீம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com