சீா்காழி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அதன் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.எ. அப்துல் ஜமீல் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளரும், சீா்காழி தொகுதி பொறுப்பாளருமான முஹம்மது யூசுப், நகர செயலாளா் முகம்மது பாரூக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் 2020-2023 ஆம் ஆண்டிற்கான சீா்காழி நகர புதிய நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி கௌரவத் தலைவராக டாக்டா் எஸ்.அன்வா் அலி, தலைவராக ஜெ.சிராஜுதீன், செயலாளராக எஸ்.அப்துல் ரஹீம் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். நகர துணைச் செயலாளா் அப்துல் பாசித் நன்றி கூறினாா்.