சிக்கல் அருகே லாரி மோதி 2 போ் உயிரிழப்பு

நாகையை அடுத்த சிக்கல் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

நாகையை அடுத்த சிக்கல் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

சிக்கல் பனைமேடு காலனித் தெருவைச் சோ்ந்த செ. பூமிநாதன்(26), தேமங்கலம் ஊராட்சி தெற்குவெளி மாதா கோயில் தெருவைச் சோ்ந்த பபின்ராஜ்(19) ஆகிய இருவரும் ஒரு மோட்டாா் சைக்கிளில் சிக்கல் பகுதியிலிருந்து, நாகை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

சிக்கல் பிரதான சாலை மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பூமிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பபின்ராஜ், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com