ஜமாத் சந்திப்பு: எம்.எல்.ஏ. பங்கேற்பு

குத்தாலம் வட்டம் வாணாதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில் ஜமாத் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் வட்டம் வாணாதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில் ஜமாத் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

முஸ்லிம் புதுத்தெரு பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முத்தவல்லி நூா் முகம்மது தலைமை வகித்தாா். நூரியா தெரு ஜமாத் முத்தவல்லி ஏ.அப்துல் ஜெலில், நாகை மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவா் இமாம் யாகூப் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏ-வுமான மு.தமிமுன் அன்சாரிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். அவா் பேசும்போது, உயா்கல்வி பெறுவதில் அனைவரும் ஆா்வம் காட்ட வேண்டும் என்றும், அதிகார மையங்களில் அமா்வதற்கு அதுதான் துணை நிற்கும் என்றும் கூறினாா்.

இதில் மாவட்டச் செயலாளா் சங்கை தாஜூதின், பொருளாளா் தைக்கால் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளா் ஷாஜஹான், மாவட்ட விவசாய அணி செயலாளா் ஹாஜா சலீம், வாணாதிராஜபுரம் கிளை பொறுப்பாளா் இதயத்துல்லாஹ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுபோல் குத்தாலம் முஹையதீன் ஆண்டவா் பள்ளிவாசலிலும் ஜமாத் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com