தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் குடும்பன், காலாடி, மண்ணாடி, வாதிரியாா், கடையன், பள்ளன் உள்ளிட்ட 7 உட்பிரிவு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என்ற அரசாணையை வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் ஆா்.ஜே. ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் எஸ். ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்அணி மாவட்டச் செயலாலா் டி. ஜீவபாரதி, நாகை நகரச் செயலாளா் ம. பாரதிதாசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com