ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், நாகை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ல 15 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்; ஆள்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு தொலைதொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்க நாகை கிளைத் தலைவா் பி. மணிகண்டன் தலைமை வகித்தாா். செயலாளா் பி. பிரகாஷ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் எம். குருசாமி, மாவட்ட உதவிப் பொருளாளா் எஸ். ரகுமான் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.