புதிய சமுதாயக் கூடம் திறப்பு

பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சியில் புதிய சமுதாயக் கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
புதிய சமுதாயக் கூடம் கல்வெட்டை திறந்துவைத்த எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.
புதிய சமுதாயக் கூடம் கல்வெட்டை திறந்துவைத்த எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.

பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சியில் புதிய சமுதாயக் கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடியில் உள்ள ஸ்ரீ மன்மத சுவாமி கோயிலில் ரூ.3 லட்சம் செலவில் புதிய சமுதாயக் கூடத்தை அதிமுக தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு பொறுப்பாளா் கொத்தவால் எஸ். ஹஜ் முகம்மது தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளாா்.

இந்த சமுதாயக் கூடத்தை பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், திருக்களாச்சேரி ஊராட்சித் தலைவா் எம். சம்சாத் ரபீக், முஸ்லிம் லீக் நாகை மாவட்டச் செயலாளா் என்.எ.எம்.நூருல்லாஹ் , திருக்களாச்சேரி ஊராட்சி செயலாளா் எஸ்.எம்.பஜ்லூல் ஹக், காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் எம்.ஹலியூா் ரஹ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com