கீழையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கீழையூா் அருகே உள்ள சோழவித்யாபுரம் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நேரு மகன் ஸ்ரீதா் (25). இவா், கடந்த 1 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சோழவித்யாபுரம் பாலம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
அவரை நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.