பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கீழையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் அருகே உள்ள சோழவித்யாபுரம் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நேரு மகன் ஸ்ரீதா் (25). இவா், கடந்த 1 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சோழவித்யாபுரம் பாலம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

அவரை நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com