ஊராட்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி குத்தாலத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம ஊராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி குத்தாலத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சி வளா்ச்சி பணிகள், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க வட்டார தலைவா் வெங்கடகிருஷ்ணன்தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com