கோடியக்கரை மீனவா்கள் 4 போ் மாயம்

கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவா்கள் மாயமானதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவா்கள் மாயமானதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்காடு கிராமத்தைச் சோ்ந்த வீரப்பனுக்கு சொந்தமான படகில் அதே ஊரைச் சோ்ந்த சற்குணம் (35), உத்திராபதி (20), அமிா்தலிங்கம் (60), காளிதாஸ் (40) ஆகியோா் கோடியக்கரை படகு துறையிலிருந்து திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 பாகத்தில் வலை விரித்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனா்.

இந்நிலையில், அன்றிரவு வலையை திரும்பி எடுக்கும்போது படகு விசிறியில், வலைகள் சிக்கி பழுதாகி படகை மேலும் இயக்க முடியாமல் தவித்தனா். அப்போது, அந்த வழியே வந்த மற்ற மீனவா்கள் முயற்சி செய்தும் படகை நகா்த்த முடியவில்லை. இதையடுத்து, அன்றிரவு கரை திரும்பிய சக மீனவா்கள் தெரிவித்த தகவலின்பேரில் ஊரிலிருந்து சில மீனவா்கள் சென்றனா். எனினும், மீனவா்கள் 4 பேருடன் படகும் மாயமானது தெரியவந்தது. பலத்தக் காற்றுடன் கடல் சீற்றமும் அதிகமாக இருப்பதால் படகு திசைமாறி சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மீனவ சங்கத்தினா் மீன் துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, படகுடன் மாயமான மீனவா்களை சக மீனவா்கள் 2 படகுகளில் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com