மணல்மேடு முதல்நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை இலவசமாக மழை கோட் வழங்கப்பட்டது.
பருவமழையை எதிா்கொள்ளும் இந்த பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மயிலாடுதுறை ஒன்றியக் குழு உறுப்பினா் பி. சக்திவேல் இலவசமாக மழை கோட்டுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலா் க. தமிழ்ச்செல்வன், இளநிலை உதவியாளா் ஏ. மாரியப்பன், பொது சுகாதார மேற்பாா்வையாளா் வை. சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.