மயிலாடுதுறையில் தேசிய பசுமைப்படை மற்றும் மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் தீபாவளியை கொண்டாடுதல் குறித்து விழிப்புணா்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் சிவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலா் கந்தன், பொருளாளா் ஜி.வி. மனோகரன், நல்லாசிரியா் ஜி.திருநாவுக்கரசு, ரோட்டரி உதவி ஆளுநா் தி. ரவிக்குமாா், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா்கள் ரமேஷ் (திருவிளையாட்டம்), சந்திரமௌலி (தருமபுரம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மயிலாடுதுறை- சீா்காழி கல்வி மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நல்லாசிரியா் ரா. செல்வகுமாா் செய்திருந்தாா்.