மயிலாடுதுறை கா்ணசூா்யோதயம் அறக்கட்டளை சாா்பில், நிகழாண்டு தீபாவளி இல்லாதவா்களுடனான தீபாவளி திருநாளாகக் கொண்டாடப்பட்டது.
கும்பகோணம் வட்டம் திருச்சேரை பகுதியில் இயங்கிவரும் சுடா் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில், பள்ளிக்குத் தேவையான சமையல் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், அறக்கட்டளை நிறுவனா் பா. வினோத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.