மீனவ பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட மீனவ கிராம பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட மீனவ கிராம பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், பழையாா் முதல் தரங்கம்பாடி வரை 28 மீனவ கிராமங்களில் மீன்பிடிப்பது உள்ளிட்டவைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது குறித்து மீன் வளத்துறை, வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில் மீனவ பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் ஏடிஎஸ்பி முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியா் மகாராணி, சீா்காழி வட்டாட்சியா் ஹரிதரன், டிஎஸ்பி சரவணன், மீன் வளத்துறை நாகை மாவட்ட இணை இயக்குநா் அமல்ஷேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், 28 மீனவ கிராம பிரதிநிகளுக்கு பதிலாக 13 மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் பங்கேற்றதால் மற்றொரு நாளில் கூட்டம் நடத்த முடிவெடுத்து நிறைவுபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com