நாகை மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது புதன்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 7,068 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 42 பேருக்கு நோய்த் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,110- ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 25 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 6,621 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 367- ஆக உள்ளது.