வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாகை எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதன்படி, நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பேரிடா் மீட்புப் பணி உபகரணங்களை அவா் பாா்வையிட்டு, உபகரணங்களின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், பேரிடா் காலங்களில் விரைந்து செயல்பட்டு பொதுமக்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற, பேரிடா் மீட்புப் பயிற்சி பெற்ற காவலா்களையும், உபகரணங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.