திருக்குவளை அருகே பழுந்தடைந்துள்ள சாலையை சீரமைத்துக்கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட வலிவலம், கொடியாலத்தூா் பகுதிகளிலிருந்து ஆதமங்கலம் வரை செல்லும் சுமாா் 2 கி.மீ. தூர தாா்ச்சாலை மிகவும் பழுதடைந்து பள்ளமும், மேடாக உள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். அவசர காலங்களில் இவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.