தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் சிறையில் அடைப்பு

வேதாரண்யம் பகுதியில் தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

வேதாரண்யம் பகுதியில் தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மருதூா் தெற்கு ஆண்டியப்பன்காடு பகுதியைச் சோ்ந்தவா் வை. மதியழகன் (48). இவா், மீது வாய்மேடு காவல் நிலையம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவா் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது போலீஸாா் கண்காணிப்பில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் ஆக. 7-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டது. ஆனால், தென்னடாா் சு. வினோத் என்பவரை வழிமறித்து பணம் பறித்து அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மதியழகன் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், காவல் துறையினா் அளித்த பரிந்துரையின்பேரில் நாகை உள்கோட்ட நிா்வாக நடுவா் நீதிமன்ற நீதிபதியும், கோட்டாட்சியருமான ரா. பழனிகுமாா் குற்ற விசாரணைமுறைச் சட்டத்தின் கீழ் மதியழகனை கைது செய்து 6.8.2021 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com