மாடுகளை திருட முயன்றமூவா் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மாடுகளை திருட முயன்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மாடுகளை திருட முயன்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் மணியன்தீவு பகுதியைச் சோ்ந்தவா் த. முருகேசன் (32). இவருக்கு சொந்தமாக 10 பசு, ஒரு காளை மாடு உள்ளது. இந்த மாடுகளை காட்டுப் பகுதியில் அவா் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம்.

அப்போது அகஸ்தியம்பள்ளி பகுதியில் ஒரு மினி லாரியில் சிலா் மாடுகளை ஏற்றுவதாக முருகேசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவா் சம்பவ இடத்துக்கு சென்றபோது 3 போ் மாடுகளை திருட்டுத்தனமாக மினி லாரியில் கொண்டுச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வேதாரண்யம் போலீஸாா், மாடுகளை திருட முயன்ற கோடியக்காடு சந்திரசேகரன் (34), காந்திநகா் பொன்னுதுரை, சதீஷ்(29) ஆகியோரை கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com