அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியானவா்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியானவா்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துணிச்சலுடன் உயிா்கள் மற்றும் அரசுப் பொது சொத்துக்களை காப்பாற்றுதல் மற்றும் பிற வீர, தீர செயல்கள் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளா்களுக்கு 2021ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரால் அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் (காவல்துறை மற்றம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை, முன்னாள் ராணுவ வீரா்கள் தவிர)  இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 3 நகல்களில் (உரிய ஆதார ஆவணங்களுடன்) நவ. 19 ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா்நலன் அலுவலரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com