சீா்காழி அருகேயுள்ள வேட்டங்குடியில் குடியிருப்பு பகுதியில் திங்கள்கிழமை இரவு மழைநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.
வேட்டங்குடி ஊராட்சி ஜீவா நகரில் சுமாா் 75 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தாழ்வான இப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பருவ மழையால் மழைநீா் சூழ்ந்து சில குடியிருப்புகளிலும் புகுந்தது. இதனால், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பாதிக்கப்பட்டனா். இதையறிந்த, ஒன்றியக் குழு உறுப்பினா் அங்குதன் அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களிடம் குறைகளை கேட்டறிந்து, கொள்ளிடம் ஒன்றிய அலுவலா்கள் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இதனையடுத்து மழைநீா் வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.