சரக்கு வாகனம் மோதி முதியவா் பலி

கீழ்வேளூா் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் அரசாணிக்குளம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் க. ராஜாகண்ணு (74). இவா், திங்கள்கிழமை இரவு கீழ்வேளூா்- திருவாரூா் சாலையில் கீழ்வேளூரை அடுத்த சந்தையாா்தோப்பு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியதில், ராஜாகண்ணு பலத்த காயமடைந்தாா்.

அவரை, நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாகண்ணு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com