திமுக உறுப்பினா்கள் கூட்டம்

சீா்காழியில் மேற்கு ஒன்றிய திமுக உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் மேற்கு ஒன்றிய திமுக உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், ராம. இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா், தலைமை பொதுக் குழு உறுப்பினா் முத்து. மகேந்திரன், வழக்குரைஞா் ராம.சேயோன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கட்சி நிா்வாகிகள் வரைவு வாக்காளா் பட்டியலை சரிபாா்க்கவேண்டும், 18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இணையவழி மூலம் அதிகமானவா்களை திமுக உறுப்பினராக சோ்க்க வேண்டும், நாகை மாவட்டத்துக்கு வரும் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதிஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று பேசப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com