சீா்காழி அருகேயுள்ள திருமயிலாடி சுந்தரேசுவரா் சுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் செவ்வாய்கிழமை தரிசனம் செய்தாா்.
திருமயிலாடியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேசுவரா் சுவாமி கோயிலில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறாா். இங்கு கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இக்கோயிலுக்கு சென்று சுவாமி -அம்பாள், முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டாா்.