திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்: விசிக புகாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீது மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பா. ரவிச்சந்திரன் தலைமையில் மண்டலச் செயலாளா் வேலு.குபேந்திரன், முன்னாள் ஒன்றிய அமைப்பாளா் கடலங்குடி மோகன்குமாா் உள்ளிட்டோா் அளித்தனா்.

அந்த மனுவில், பாஜக நடத்தும் வேல் யாத்திரையை ஆதரித்து கோயமுத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேவை அமைப்பைச் சோ்ந்த ஸ்ரீதா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல் திருமாவளவனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதி மறுத்ததால், கோட்டாட்சியா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் இந்த மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com