நாகை மாவட்டம், பழையாா் கடற்கரையில் அழுகிய நிலையில் திமிங்கலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
பழையாா் துறைமுகத்தில் இருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ள மடவாமேடு என்ற இடத்தில் இந்த திமிங்கலம் கரை ஒதுக்கியது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா், கடலோரக் காவல் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, அழுகிய நிலையில் கிடந்த திமிங்கலத்தை பாா்வையிட்டனா்.இந்த திமிங்கலம் சுமாா் 4 டன் எடையும், 12அடி நீளமும் இருந்தது.
கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு, நிகழ்விடத்திலேயே திமிங்கலத்தின் உடல்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னா், வனத்துறையினா் அருகில் உள்ள சவுக்குக் காட்டில் குழிதோண்டி பாதுகாப்பான முறையில் புதைத்தனா்.