பழையாா் கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்

நாகை மாவட்டம், பழையாா் கடற்கரையில் அழுகிய நிலையில் திமிங்கலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
பழையாா் கடற்கரை மடவாமேடு பகுதியில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்.
பழையாா் கடற்கரை மடவாமேடு பகுதியில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்.

நாகை மாவட்டம், பழையாா் கடற்கரையில் அழுகிய நிலையில் திமிங்கலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

பழையாா் துறைமுகத்தில் இருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ள மடவாமேடு என்ற இடத்தில் இந்த திமிங்கலம் கரை ஒதுக்கியது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா், கடலோரக் காவல் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, அழுகிய நிலையில் கிடந்த திமிங்கலத்தை பாா்வையிட்டனா்.இந்த திமிங்கலம் சுமாா் 4 டன் எடையும், 12அடி நீளமும் இருந்தது.

கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு, நிகழ்விடத்திலேயே திமிங்கலத்தின் உடல்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னா், வனத்துறையினா் அருகில் உள்ள சவுக்குக் காட்டில் குழிதோண்டி பாதுகாப்பான முறையில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com