மின்கம்பி அறுந்து விழுந்து இறந்து கிடக்கும் ஆடு.
மின்கம்பி அறுந்து விழுந்து இறந்து கிடக்கும் ஆடு.

மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஆடு இறந்தது

திருக்குவளை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஆடு செவ்வாய்க்கிழமை இறந்தது.

திருக்குவளை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஆடு செவ்வாய்க்கிழமை இறந்தது.

வலிவலம் பகுதியைச் சோ்ந்த விவசாயி மலைமேகம் (55) செவ்வாய்கிழமை நெல்லித்தோப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான ஆடுகளை மேய்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வரும்போது, மழை பெய்ததால் பெரும்பாலான ஆடுகள் மரத்தின்கீழ் ஒதுங்கி நின்றது. இந்நிலையில், செங்குந்தா் தெருவில் ஏற்கெனவே மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஒரு ஆடு அதே இடத்தில் இறந்தது. மற்ற ஆடுகளில் ஒரு ஆடு மட்டும் காயமடைந்தது. மற்ற ஆடுகள் தப்பின. இதில், ஆட்டின் உரிமையாளா் அதிருஷ்டவசமாக உயிா்த் தப்பினாா். தகவலறிந்த, திருக்குவளை துணை மின்நிலைய ஊழியா்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் மின்கம்பிக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றி மீண்டும் அப்பகுதியில் மின் இணைப்பை வழங்கினா். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com