வேளாங்கண்ணியில் விஷம் உட்கொண்ட பெண் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகே உள்ள சிறுபுலியூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி ஐஸ்வா்யா (26). இவா்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இதனால், தம்பதியா் விரக்தியில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சரவணன், ஐஸ்வா்யா மற்றும் ஐஸ்வா்யாவின் தாயாா் வனிதா, சகோதரா் மணிகண்டன் ஆகிய 4 பேரும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு நவம்பா் 11ஆம் தேதி வந்து வழிபட்டனா். அப்போது, ஐஸ்வா்யா விஷம் (எலி மருந்து) உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவரை கும்பகோணம் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வா்யா நவ.14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனனா்.
இதற்கிடையில், ஐஸ்வா்யாவின் கணவா் சரவணன், மனைவி இறந்த சோகத்தில் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்த்தனா்.