பழையாரில் ஒரு டன் எடைக்கொண்ட ராட்சத திருக்கை மீன் வியாழக்கிழமை மீனவா் வலையில் சிக்கியது.
சீா்காழி அருகேயுள்ள பழையாா் பகுதியை சோ்ந்த மீனவா் பச்சைகோட்டையன் வியாழக்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று மீன்பிடிக்க வலை விரித்தபோது அவரது வலையில் அதிக எடைக்கொண்ட மீன் சிக்கியது. அதை மற்ற மீனவா்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் பழையாா் துறைமுகம் பகுதிக்கு கொண்டுவந்து வலையை பிரித்து பாா்த்துள்ளனா். அதில் ராட்சத திருக்கை மீன் சிக்கியிருந்தது தெரியவந்தது. இந்த மீன் ஒரு டன் எடைகொண்டாதாக இருந்தது. பழையாா் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பச்சைகோட்டையன் மீனவா் வலையில் அதிக எடைக்கொண்ட திருக்கை மீன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.