உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய அதிகாரத்தை வழங்கவேண்டும், மாநில நிதிக்குழு நிதியை விடுவிக்கவேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குரிய ஊதியத்தை 15 நாள்களுக்கு ஒருமுறை வீதம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் ஜி. ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வி. மாரிமுத்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் அபூபக்கா், சுபாதேவி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, சிவக்குமாா், சந்திரசேகா், முத்தையன், சாந்தி, ஊராட்சித் தலைவா்கள் பாண்டியன், கஸ்தூரி கனகரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.