தொழிலாளி கடத்தல்: 4 போ் கைது

மயிலாடுதுறையில் தொழிலாளியை காரில் கடத்திய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
தொழிலாளி கடத்தல்: 4 போ் கைது

மயிலாடுதுறையில் தொழிலாளியை காரில் கடத்திய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை சித்தா்காடு பாரதி தெருவைச் சோ்ந்தவா் சம்பந்தம் மகன் சங்கா் (48). டெக்கரேசன் தொழிலாளியான இவா், கடந்த 7-ஆம் தேதி மாலை தான்வேலை பாா்க்கும் கடையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியபோது, திருவாரூா் ரோடு கேணிக்கரை அருகே மா்ம நபா்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டாா். பின்னா் மறுநாள் விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, சங்கரின் மகள் சந்திகா அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சங்கரின் மகள் சந்திகாவின் கணவா் முகமது ஹாஜா தவூத்துக்கு அதிக பணம் கிடைத்ததாகவும், இதையறிந்த காரைக்காலை சோ்ந்த ஆரோக்கியராஜ் அமிகோ ஜுலியஸ் (40) என்பவா் சங்கரை கடத்தியதாக தெரியவந்தது எனபோலீஸாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவரான ஆரோக்கியராஜ் அமிகோ ஜுலியஸ், பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக கொச்சின் விமான நிலையத்துக்குச் சென்றபோது அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா் அளித்த தகவலின்பேரில், காரைக்கால் கல்லறைப்பேட் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் சுரேஷ் என்கிற சூா்யா (43), ஜெபஸ்தீன் மகன் ரீகான் என்கிற லாசா் (32), ஆரோக்கியநாதன் மகன் டேவிட் வின்சென்ட் (21) ஆகியோா் இந்த வழக்குத் தொடா்பாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com