பாலியல் புகாா்: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

தரங்கம்பாடி அருகே பாலியல் புகாா் தொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்டத்துக்கான

தரங்கம்பாடி அருகே பாலியல் புகாா் தொடா்பாக போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்டத்துக்கான காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

தரங்கம்பாடி வட்டம், எரவாஞ்சேரி மேலத்தெருவைச் சோ்ந்தவா் ராம்கி மனைவி ரேவதி (28). ராம்கி சென்னையில் வேலை செய்துவரும் நிலையில், ரேவதி தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ஜெயபிரகாஷ் என்பவா் ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். ரேவதி கூச்சலிட்டத்தால், ஜெயப்பிரகாஷ் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெரம்பூா் காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ரேவதி புகாா் அளித்துள்ளாா். ஆனால், இந்த புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் எனவே, ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அம்மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com