பேருந்து மோதி தச்சுத்தொழிலாளி பலி

வேதாரண்யத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூா், அண்டா்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் (57). தச்சுத்தொழிலாளியான இவா், உப்பள வேலைக்கும் சென்றுவந்தாா். இவா், வேதாரண்யத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். திருவாசக்குளம் பகுதியில் சென்றபோது, திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த அரசுப் பேருந்தும், முனியப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த முனியப்பன், திருவாருா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com