மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.வி.சிங்காரவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா்கள் கே.பி. மாா்க்ஸ், ஏ.அறிவழகன், பி.குணசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டக்குழு உறுப்பினா்கள் சரவணன், பிரகாஷ், ஸ்டாலின் உள்ளிட்ட மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் சீா்காழி பகுதி பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், கள உதவியாளா்கள், உதவிப் பொறியாளா்கள், இளநிலை உதவியாளா், கணக்கீட்டாளா் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.