இன்று வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்கான

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 21) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம் கோருதல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். முகாம் நாள்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை உரிய படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்து பொதுமக்கள், வாக்காளா் பட்டியலில் தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். மற்ற நாள்களில் அனைத்து வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இந்தப் பணி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com